ஜெயலலிதா இருந்தால் இரும்புக்கரம் கொண்டு தடுத்திருப்பார் -வைகோ

 

கோவில்பட்டியில் மதிமுக கட்சி நிர்வாகி ஒருவர் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார், தொடர்ந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் மதநல்லிணக்கமும், ஒற்றுமையும் உள்ளது. தமிழகத்தில் மதசார்பின்மையை சிதைக்கும் வகையிலும், சீர்குலைக்கும் வகையிலும் சதி நோக்கத்தோடு, ராம ராஜ்ய ரத யாத்திரை என்ற பெயரில், வடநாட்டில் தொடங்கி இங்கு வந்துள்ளனர். இதற்கு முழுபாதுகாப்பு தமிழக அரசு கொடுக்கிறது.அண்ணா திமுக என்ற அண்ணா பெயரை சொல்ல யோக்கியதை இல்லாத அரசு அண்ணா பெயரையோ, படத்தினையோ, கட்சியில் கருப்பு, சிவப்பு கலரை பயன்படுத்த தகுதியில்லாத அரசு பெரியார் சிலையை உடைப்போம் என்று அராஜக பேர்வழியயை கைது செய்யமால், ஜனநாயக முறையில் கருப்புக்கொடி காட்ட சென்றவர்களை கைது செய்வது என்ன நியாயம்,போராட்டக்களத்திற்கு வருவதற்கு முன்பே திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களை கைது செய்ததது என்ன நியாயம், மதுரையில் கிறிஸ்துவர்கள் ஜெபவீடு தாக்கப்படுகிறது, பெண் தாக்கப்படுகிறார். பைபிள் எரிக்கப்படுகிறது. குற்றவாளியின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளிவந்தும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை, காவல்துறைக்கு கடும் கண்டனத்தினை தெரிவிக்கிறேன், மேலும் கிறிஸ்துவ பள்ளிக்கு சென்று சுற்றுலா செல்லக்கூடாது, அப்படி சென்றால் இந்து கோவில்களுக்கு தான் செல்ல வேண்டும் என்று மிரட்டியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இதையெல்லாம் அனுமதித்து இருக்க மாட்டார், இரும்புக்கரம் கொண்டு தடுத்து இருப்பார், பெரியார் சிலையை செருப்பால் அடிப்போம் என்று சொன்னவன் நடவடிக்கை எடுக்கமால், நடமாட விட்டதால், இயந்திரம் வைத்து பெரியார் சிலையை எடுக்கின்றனர்.களவாணிகள், முதுகெலும்பு இல்லாதவர்கள், தைரியம் இருந்தால், மோடி மற்றும் தமிழக அரசு ஆதரவு இருப்பதாக கூறுகின்றவர்கள் காவல்துறையினர் துணையுடன் வந்து பெரியார் சிலைக்கு வரட்டும், இளைஞர்களுடன், ஆயுதங்களுடன் வந்து, துண்;டு, துண்டாக கைகால்போய்விடும், வினையை விதைச்சு இருக்கிறங்கீங்க வினையை அறுப்பிக்க என்றார். பேட்டியின் போது தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயாக ரமேஷ், கோவில்பட்டி நகர செயலாளர் பால்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment