வைகோ காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டி பேசியது, பேச வேண்டிய ஒன்று-பொன்.ராதாகிருஷ்ணன்

கடந்த சில தினங்களுக்கு முன் மாநிலங்கவையில்  காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்றது.அப்பொழுது மதிமுக எம்.பி.வைகோ பேசுகையில்,காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது  என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக  காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டார்.அந்த அறிக்கையில், அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்ட ஒரு பச்சோந்தி வைகோ என்று கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில்  முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில்,நாடாளுமன்றத்தில் வைகோ காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டி பேசியது, பேச வேண்டிய ஒன்று. 2009 அதற்கு முன்னாள் நடைபெற்ற சம்பவங்களையும் பேச வேண்டும் இன்னும் பேசுவார்.

மேலும் ள்விக்கு பதில் அளிக்க மறுத்த பொன் ராதாகிருஷ்ணன் ,திமுக பெற்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது வீழ்ச்சிப் பாதையில் திமுக சென்று கொண்டிருக்கிறது. சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.