ஒரு சிலர் தங்களது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடுவார்கள். பெரிய பார்ட்டி, ஏழைகளுக்கு உதவி செய்வது, இன்னும் சிலர் அன்றைய தினத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசுகளையும் கொடுத்து மகிழ்வர்.
அந்த வகையில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் பிரபலமான தொழிலதிபராக இருந்து வரும் மோதிலால், தனது 73வது பிறந்தநாளன்று 35 ஆயிரம் அபராதம் கட்டி, 17 கைதிகள் விடுதலைக்கு உதவி செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ எனது மகன் வக்கீலாக இருக்கிறார். அவர் மூலமாக சிறு தவறுக்காக தண்டனை பெற்று வரும் கைதிகள் அபராத தொகை கட்டமுடியாமல் சிறையில் இருப்பவர்களை பற்றி தெரிந்து கொண்டு அவர்கள் வெளியே வர உதவி செய்தேன். இதன் மூலம் அவர்கள் திருந்தி வாழ்வார்கள் என எதிர்பார்க்கிறேன். ‘ என கூறினார்.