நமஸ்தே என கூறி உரையை தொடங்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.!

அகமதாபாத்தில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள (மோட்டேரா) சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் எனும் பெயரில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ட்ரம்ப் மற்றும் மோடி மைதானத்துக்கு வந்தடைந்தனர். இதையடுத்து இருநாட்டு தேசிய கீதம் போடப்பட்டது. தொடர்ந்து நமஸ்தே டிரம்ப் என்ற தலைப்பில் பிரதமர் மோடி வரவேற்பு உரையை அளித்தார்.

இதையடுத்து நமஸ்தே என கூறி உரையை தொடங்கினார் அமரிக்க அதிபர் ட்ரம்ப். இந்த நிகழ்ச்சியில் சுமார் 1 லட்சத்துக்கு மேற்பட்டோர் திரளாக குவிந்துள்ளனர். பின்னர் பல்வேறு இசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சி என டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்