காஷ்மீரில் பதற்றத்தை தணிக்க வேண்டும்-அமெரிக்க அதிபர் டொனால்ட்  டிரம்ப்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் இரண்டு பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது


இந்த நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட்  டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில்,  காஷ்மீரில் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான்  பிரதமர் இம்ரான் கானிடம் கேட்டுக்கொண்டேன். வர்த்தகம் தொடர்பாக  பேசினேன்.இது சற்று  கடினமான சூழல் என்றாலும் பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.