வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் பேசிய அமெரிக்க வெளியுறத்துறை அமைச்சர்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் அமெரிக்க வெளியுறத்துறை அமைச்சருடன் பேசியுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1637-ஐ எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இடையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் அமெரிக்க வெளியுறத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.