யு.பி.எஸ்.சி தேர்வில் மதச்சார்பின்மைபற்றி கேட்கப்பட்ட சர்ச்சையான கேள்வி!

யு.பி.எஸ்.சி சிவில் சர்விஸ் தேர்வானது ஐஏஎஸ், ஐபிஎஸ் குடிமை பணிகளுக்காக இந்த தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வானது, இந்த வருடம் ஜூலை 2இல் யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இரண்டாம் நிலை தேர்வு அண்மையில் நடைபெற்றது.

இந்த தேர்வுத்தாளில் இந்தியாவில் மதசார்பின்மை பற்றிய சவால்கள் பற்றி எழுத கேள்வி கேட்கப்பட்டது. இந்தியா மதசார்பின்மை பற்றி நேர்மறையான கருத்துக்கள் கொண்ட நாடு, அப்படி இருக்கையில் மதசார்பின்மை பற்றி எதிர்மறையாக அதன் சவால்கள் பற்றி கேட்டிருப்பது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.