“ஆசிரியருடன் ஒரு செல்ஃபி” சேலஞ் தொடங்கி வைத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் !

“SELFIE WITH GURU” ( ஆசிரியருடன் ஒரு செல்ஃபி ) என்னும் ஹேஸ்டேக் மூலம் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தெரிவித்துள்ளார்.

 

குரு பூர்ணிமாவை முன்னிட்டு ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்கள் உடன் இருக்குமாறு புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பதிவிட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு கல்லூரிகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இதனால் பல்வேரு தரப்பினரரும் தங்கள் மாணவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை எடுத்து முகநூல் மற்றும் ட்விட்டர் தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

சென்னை உட்பட பல இடங்களில் கல்லூரிகளில் கைபேசி பயன்படுத்த தடை இருக்கும் சூழலில், இந்த சேலஞ்சை செய்ய உள்ளனர்.