காஷ்மீர் விவகாரம் : பாகிஸ்தான்,சீனா கோரிக்கையை ஏற்று மூடிய அறைக்குள் ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை நடத்துகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் இரண்டு பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.பாகிஸ்தான் தரப்பில் இந்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Image result for india pakistan

இதனையடுத்து   காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் சார்பில் கூட்டம் நடைபெற்றது.இதில் ,பாகிஸ்தான் இந்தியாவுடன் அனைத்து விதமான வர்த்தக உறவு மற்றும் தூதரக உறவுகளை நிறுத்தி கொள்ள போவதாகவும் தெரிவித்தது.மேலும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு செல்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ரயில் போக்குவரத்தையும் நிறுத்தியது பாகிஸ்தான்.

இதன் பின்னர் பாகிஸ்தான் மற்றும் சீனா காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநாவிடம் முறையிட்டது. இதனை ஏற்ற  ஐநா பாதுகாப்பு கவுன்சில், இன்று ஒரு மூடப்பட்ட அறைக்குள் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.