உமா மகேஸ்வரி கொலை தொடர்பாக 3 தனிப்படைகள் அமைப்பு-நெல்லை காவல் ஆணையர்

நெல்லை ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர்  உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக நெல்லை காவல் ஆணையர் பாஸ்கரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. உமா மகேஸ்வரி கொலை ஆதாயத்திற்காக நடந்திருக்கலாம்  என்று நெல்லை காவல் ஆணையர் பாஸ்கரன் தெரிவித்தார்.