முடிவுக்கு வருகிறது ஊரடங்கு… உ.பி., முதல்வர் அறிவிப்பு…

உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை காவு வாங்கிய கொடிய கொரோனா வைரஸ் தொற்று  இந்தியாவிலும் பரவிய காரணத்தால் இந்திய்யா முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெறத்தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் இந்த முழு ஊரடங்கு ஏப்ரல் 15-ம் தேதி முடிவுக்கு வரும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் அதிகம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு முடிந்தபிறகும் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என உத்திரபிரதேச  முதல்வர் யோகி ஆதித்தியநாத் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

author avatar
Kaliraj