மனைவியுடன் கள்ளத்தொடர்பு.! கணவனை கொன்ற இருவர்.!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு பிரச்னையால் கணவர் தச்சுத் தொழிலாளி கொலை.

போ்ணாம்பட்டு அடுத்த பன்னீா்க்குட்டையில் வசித்து வந்தவர் சரவணன். இவர் தச்சுத் தொழிலாளி, இவரது மனைவி காமாட்சி இந்நிலையில் நேற்று முன்தினம் சரவணன் இரவு வெளியே சென்றார் வெளியே சென்ற சரவணன் பல மணி நேரங்களாகியும் வீடு திரும்பவில்லை, நேற்று அதிகாலை சரவணனின் உடலில் காயங்களுடன் சடலம் கடாம்பூா் சாலையில் தனியாா் திருமண மண்டபம் அருகில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து மேல்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் போ்ணாம்பட்டை கிராமத்தைச் சோ்ந்த மேளம் அடிக்கும் தொழிலாளி மதன் என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் விசாரணையில், சரவணனின் மனைவி காமாட்சிக்கும், மதனுக்கும் தகாத உறவு இருந்ததும், அதனால் ஏற்பட்ட தகராறில், மதனும் மற்றும் மாமா வெங்கடேசன் என்பவரும் சேர்ந்து சரவணனை கொலை செய்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் இந்த கொலை சமப்வம் தொடர்ந்து போலீஸாா் மதனை நீதிபதி முன்பு ஆஜா்படுத்தி விட்டு சிறைக் காவலுக்கு அனுப்பினா். மேலும் தலைமறைவாக உள்ள மதன் மாமனார் வெங்கடேசனைத் தேடி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.