காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் பொதுமக்கள் வாகனம் மீது தாக்குதல்! சாதுர்யமாக செயல்பட்ட வாகன ஓட்டுநர்!

காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் பொதுமக்கள் வாகனம் மீது தாக்குதல்! சாதுர்யமாக செயல்பட்ட வாகன ஓட்டுநர்!

காஷ்மீரில் உள்ள ராம்பன் மாவட்டத்தில் படோத் எனும் ஊரில் பொதுமக்கள் தனியார் வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, குறுக்கே இரண்டு பயங்கரவாதிகள் அந்த பேருந்தை பயங்கர ஆயுதங்களுடன் தாக்க முற்பட்டனர். ஆனால், அந்த வாகனத்தை ஓட்டிவந்தவர் சற்றும் பயப்படாமல் வாகனத்தை வேகமாக ஓட்டி அங்கிருந்து தப்பித்துச் சென்றார். மேலும், இதுகுறித்து ராணுவத்திற்கு தகவலும் அளித்தார்.

இந்த தகவலை அடுத்து அந்த இடத்திற்கு குயிக் ரியாக்ஷன் டீம் எனப்படும் அதிவிரைவு படை ராம்பன் பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டு அந்த பயங்கரவாதியிடமிருந்து பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சற்றும் பயங்கரவாதிகளை கண்டு பயப்படாமல் துரிதமாக செயல்பட்டு பொதுமக்களை காப்பாற்றி, அதே நேரத்தில் ராணுவத்திற்கும் தக்க சமயத்தில் தகவல் கொடுத்த அந்த ஓட்டுநரை இராணுவத்தினர் பாராட்டி வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube