Breaking: காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ராணுவம் உஷார்

கடந்த ஒரு வாரமாவே காஷ்மீரில்  பதட்ட நிலையில் இருந்து வருகிறது காரணம்  இதற்க்கு அங்கு ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது அதுமட்டுமில்லாமல் அங்கு அமர்நாத் யாத்திரை சென்றவர்கள் உடனே காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும்  என்று தெரிவிக்கப்பட்டது .

Image result for தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

இந்நிலையில் ஜெய்ஷ்-இ -முகமது  பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் அசாரின் சகோதரர் இப்ராஹிம் தலைமையில் 15 பயங்கரவாதிகள் எல்லை பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது.

இதனிடையே ராணுவத்தினர் சோப்பூர் பகுதியில் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள்  இருவருமே ஜெய்ஷ்-இ -முகமது  பயங்கரவாத அமைப்பை  சேர்ந்த பயங்கரவாதிகள் என தெரியவந்துள்ளது .

author avatar
Dinasuvadu desk