வாக்களிக்க சென்ற இருவர் பரிதாபமாக பலி!

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து மக்களும் தங்களது வாக்குகளை உற்சாகமாக பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு சிவகிரியில் வாக்களித்து விட்டு வந்த முதியவர் முருகேசன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மேலும், சேலம் வேடப்பட்டி வாக்குசாவடியில் வாக்களித்துவிட்டு வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இவர்களது, உயிரிழப்பு அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment