புல் புல் புயல் கரையை கடந்த போது இரண்டு பேர் உயிரிழப்பு..!

வங்கக்கடலில் மையம் கொண்டு இருந்த புல் புல் புயல்  கரையை கடந்த போது ஒடிசா மட்டும் மேற்குவங்கத்தில் சூறாவளியுடன்  பெரும் கனமழை பெய்தது. புல் புல் கரையை கடக்கும் போது இரண்டு பேர் இறந்து உள்ளனர்.
ஒடிசாவில் புயல் காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.அப்போது கேந்திரபரா மாவட்டத்தில் சுவர் இடிந்து ஒருவர் பலியானார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கனமழைக்கு ஒருவர் பலியாகி உள்ளார். புல் புல் புயலால் ஏற்பட்ட பயிர் சேதங்களை மதிப்பிட மத்திய குழுவினரை அனுப்ப வேண்டும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டு கொண்டார்.

author avatar
murugan