தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2 பேர் அனுமதி- அமைச்சர் விஜயபாஸ்கர்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள் என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களுக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரில் 10% பேருக்கு டெங்கு அறிகுறி உள்ளது. தற்போது பெய்யத் தொடங்கியுள்ள பருவமழை சுகாதாரத் துறைக்கு சவாலாக இருக்கும்.காய்ச்சலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார்.