தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும். சென்னையில் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக ராமநாதபுரம் , தூத்துக்குடி ,நெல்லை ,திருவண்ணாமலை,நீலகிரி ,தேனி,  திண்டுக்கல்,கன்னியாகுமரி ,புதுக்கோட்டை ,சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்பு உள்ளது.தமிழகத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் 19 சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளது. மீனவர்கள் குமரி, லட்ச தீவு, மாலத்தீவு உள்ளிட்ட கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.தற்போது  தமிழகத்தில் இயலப்பை விட 3 மடங்கு அதிகம் மழை பெய்து உள்ளது என்றும் தெரிவித்தார்.