அதிகாலை இரண்டு பேருந்துகள் மோதல்.! 30 பேர் காயம்.!

  • கள்ளக்குறிச்சி  மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் சுங்க சாவடி அருகே இரு தனியார் பேருந்துகள் மோதி கொண்டது.
  • இந்த விபத்தில் பயணம் செய்த 30 பயணிகள் காயம் அடைந்தனர்.

கள்ளக்குறிச்சி  மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள சுங்க சாவடி அருகே இன்று அதிகாலை இரு தனியார் பேருந்துகள் மோதி கொண்டது. இந்த விபத்தில் பயணம் செய்த 30 பயணிகள் காயம் அடைந்தனர்.அடிபட்ட பயணிகளின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக  விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பேருந்துகளில் இருந்து மீட்கப்பட்டவர்களை அருகில் இருந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
murugan