தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு அடுத்தவாரம் வெளியாகலாம்-ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு அடுத்தவாரம் வெளியாகலாம் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இது தொடர்பாக  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்பு தற்போதைக்கு வர வாய்ப்பில்லை. அடுத்தவாரம் தீர்ப்பு வரலாம்.தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் குவிக்கப்பட்டது தேர்தல் தொடர்பான முன் ஏற்பாடுகள் தானே தவிர மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Leave a Comment