“10 வருடம் வனவாசம் “போனவர் டி.டி.வி. தினகரன்…!!விளாசிய முதல்வர்….!

10 வருடம் வனவாசம் போனவர் டி.டி.வி. தினகரன் என்று முதல்வர் பழனிச்சாமி சாடியுள்ளார்.

நேற்று காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்த நாள் பொது கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சினார் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்தால் தான், நாம் நினைக்கிறவர்கள் ,நீங்கள் நினைக்கிறவர்கள் பாரத பிரதமராக வர முடியும். 10 வருடம் வனவாசம் போனவர் டி.டி.வி. தினகரன். அம்மா மறைந்த பின் வந்து விட்டார். டி.டி.வி.தினகரன் குடும்பத்திலுள்ள அனைவரும் கட்சி ஆரம்பித்து விட்டார்கள்.

குடும்பம் முழுவதும் அ.தி.மு.கவை சுறண்டி கொண்டும் , அம்மாவை ஏமாற்றி கொண்டு வந்தார்கள்.உழைப்பும் ,விசுவாசம் இருந்தால் தொண்டராகிய நீங்கள் என் போன்ற நிலைக்கு வரலாம். இது வாரிசு அரசியல் கிடையாது. அரசியல் பதவிகளை யருக்கும் பட்டா போடு கொடுக்க வில்லை என்று கூறினார்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment