அழுகிய உருளை கிழங்கு! வண்டு மிதந்த மைதா! திருச்சி பானிபூரி குடோனுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

  • திருச்சி தேவதானம் பகுதியில் பானிபூரி தயாரிக்கும் குடோனுக்கு சுகாதார சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். 
  • சுகாதாரமற்ற நிலையில் பானிபூரி தயாரிப்பத்ததாக கூறி அந்த குடோனுக்கு சீல்வைக்கப்பட்டது. 

திருச்சியில் தேவதானம் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த சில இளைஞர்கள் சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு பானிபூரி மொத்தமாக தயாரிக்கப்பட்டு மற்ற பானிபூரி வியாபாரிகளுக்கு மொத்தமாக விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது.

இங்கு சுகராதரமற்ற முறையில் பானிபூரிகள் தயாரிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், சுகாதாரத்துறை அதிகாரி சித்ரா தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அந்த குடோனில், அழுகிய நிலையில் உருளைக்கிழங்குகளை, வண்டுகள் நிறைந்த மைதா மாவு என சுகாதாரமற்ற முறையில் பானிபூரி தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டு அந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த இளைஞர்களிடம் அதிகாரிகள் விசாரித்து வருகிறன்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.