பொன்னியின் செல்வன் படத்திற்கு வந்த சோதனை.!

பொன்னியின் செல்வன் படத்திற்கு வந்த சோதனை.!

இந்த பொன்னியின் செல்வன் படம் ட்ராப் ஆனதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இவரது கனவு படமாக உருவாகி உருவாகி வந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய இந்த நாவலை தமிழ் திரையுலகில் பலர் முயன்றனர் ஆனால் அவர்கள் முயற்சி தோல்வியடைந்தது. தற்போது அதனை மணிரத்னம் கையில் எடுத்துள்ளார்.மேலும் இந்த படத்தில்நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், அமிதாப்பச்சன், என பல திரைபிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் மற்றும் மணிரத்னம் ஆகியோர் தயாரித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் 10 பாடல்கள் இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் பரவின. 

இந்த நிலையில் சுமார் 250 கோடி பெட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரனோ வைரஸ் காரணமாக நிறுத்து வைக்கப்பட்டிருந்தது, மேலும் படத்தின் படபிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்ற நிலையில், படப்பிடிப்பிற்காக அனுமதி தர முடியாது என்று அந்தந்த வெளிநாடுகள் படக்குழுவினரிடம் தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர். மேலும் இந்த பொன்னியின் செல்வன் படம் ட்ராப் ஆனதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube