கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள்!

கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவில் இதுவரை இந்த வைரஸ் தாக்கத்தால், 1,97,905 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5604 பேர் உயிரிழந்துள்ளனர்.  

இந்நிலையில், ரயில்வே வாரியம், கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு சிறப்பு படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை டெல்லி அரசின் வேண்டுகோளுக்கு இணங்க அனுப்பியுள்ளது. இந்த ரயில் பேட்டி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்ட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.