தடம்புரண்ட ரயில்.! 2 பேர் உயிரிழப்பு ஏராளமானோர் படுகாயம்.!

தடம்புரண்ட ரயில்.! 2 பேர் உயிரிழப்பு ஏராளமானோர் படுகாயம்.!

  • ஆஸ்திரேலியாவில் பயணிகள் ரயில் தடம்புரண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். இதில் பயணித்த ஏராளமான பயணிகள்  காயமடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து சுமார் 160 பயணிகளுடன் மெல்போர்ன் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தபோது வாலன் என்ற பகுதியில் ரயில் வந்தபோது, திடீரென என்ஜின் உட்பட 5 பெட்டிகளும் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டது. இதில் ரயில் ஓட்டுநரும், அவரது உதவியாளரும் என 2 பேரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் தடம்புரண்ட பெட்டிகளில் இருந்த ஏராளமான பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube