துபாயில் கோர விபத்து ! 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலி

துபாயில் நடந்த பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

சொகுசு பேருந்து ஓன்று ஓமனில் இருந்து துபாய் திரும்பி கொண்டிருந்தது.இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.இந்த பேருந்து துபாய்  அருகே வந்தபோது அந்த இடத்தில் இருந்த அறிவிப்பு பலகை மீது மோதியது.இதனால் பேருந்து அப்பளம் போல நொறுங்கியது.பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 17 பேர் உயிரிழந்தனர்.மேலும் 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் 8 பேர் இந்தியர்கள் என்று துபாயில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.அவர்களின் விவரங்களையும் வெளியிட்டுள்ளது.அதில் ராஜகோபாலன்,பெரோஸ் கான் பதான் ,ரேஸ்மா  பெரோஸ் கான் பதான்,தீபக் குமார்,ஜமாலுதீன் ,கிரண் ஜானி ,வாசுதேவ்,திலக் ராம் ஜவகர் தாகூர் ஆகிய 8 பேர் உயிரிழந்துள்ளனர்.