இன்றைய (25.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டிய நாள். உங்கள் விருப்பங்கள் இன்று நிறைவேற அதிக வாய்ப்புள்ளது.
ரிஷபம் : உங்கள் பொறுமையை சோதிப்பதற்கான சூழல்கள் இன்று உருவாகும். நீங்கள் சொல்லும் சொல் சில சமயம் தவறாக புரிந்து கொள்ளப்படும். அதனால் உங்கள் நெருக்கமானவர் கூட இன்று உங்களுக்கு எதிராக செயல்படலாம். புத்திசாலித்தனத்துடன் என்று நடந்து கொள்வது நல்லது.
மிதுனம் : விருந்துகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இன்று உள்ளது. உங்கள் பிரியமானவர்களின் வரவேற்பு உங்களுக்கு கிடைக்கும். உங்கள் முயற்சி உங்கள் வாழ்வை மேம்படுத்த உதவும்.
கடகம் : இன்று செயல்களை விரைவாக செயல்படுத்துவீர்கள். அதனால் உங்கள் வாழ்வில் வளர்ச்சி காணப்படும்.
சிம்மம் : செய்யும் செயல்களை பொறுமையாக செய்யவேண்டும். அமைதியாக செய்ய வேண்டும். ஆக்ரோஷமாக செயல்படுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் முயற்சி சிலசமயம் தோல்வியில் முடியும். அதனால் வருத்தப்பட வேண்டாம்.
கன்னி : உங்கள் வளர்ச்சியில் தடைகள் உண்டாகும் நாள். முறையாக திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
துலாம் : நீங்களே உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டிய நாள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி செயல்படுங்கள். பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதன் மூலம் மன நிம்மதி கிடைக்கும்.
விருச்சிகம் : தொடர் முயற்சி வெற்றியை கொடுக்கும். நண்பர்கள் நலம் விரும்பிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். அதனால் இன்று நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள்.
தனுசு : உணர்ச்சிவசப்படாமல் செயல்களை செய்தால் உங்கள் லட்சியங்களை அடையும் வாய்ப்பு உள்ளது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு முறையாக செயல்பட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.
மகரம் : வெற்றி தோல்வி இல்லாத சாதாரண நாளாக இன்று அமையும். பிறருடன் நட்பாக பழகுங்கள். இன்று சகஜமான அணுகுமுறையில் செயல்களை செய்யுங்கள்.
கும்பம் : நேர்மறை எண்ணங்களை உங்கள் மனதில் வளர்த்து கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்களால் உங்கள் வேலை பாதிக்கக்கூடும். கவனமாக செயல்படுங்கள். நீங்கள் மிகவும் விரும்பிய ஒன்று உங்களை விட்டு நீங்கள் அதிக வாய்ப்பு உள்ளது.
மீனம் : பிரச்சனைகள் இருக்கும் நாள். மனதில் குழப்பம் உண்டாகும் நாள். அமைதியாக இருக்க வேண்டிய நாள். இன்று இந்த நாளை கடத்துவது உங்களுக்கு கஷ்டமாக கூட இருக்கலாம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.