தீபாவளி கொண்டாட அடுத்த 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் – பொன் ராதாகிருஷ்ணன்

தீபாவளி கொண்டாட அடுத்த 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்திருப்பதை எதிர்க்கட்சியினர் ஒப்புக் கொள்கிறார்கள் .ஆதலால் காங்கிரஸ் வேட்பாளர் மீது வழக்கு தொடர வேண்டும்.
இடைதேர்தல் வெற்றி பரிசாக மது இல்லாத தீபாவளி கொண்டாட அடுத்த 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்திரவிட வேண்டும் என்று  பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.