குரூப் 4 தேர்வர்களின் கவனத்திற்கு ! நீங்கள் செய்ய வேண்டியது என்ன ?

குரூப் -4 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதில் மொத்தம் 6,491 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த காலியிடங்களுக்கான தேர்வு நாளை நடைபெறுகிறது. நாளை நடைபெறும் தேர்வை சுமார்  16 லட்சத்து 30 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

காலை 10 மணி முதல் 1 மணி வரை மூன்று மணி நேரம் தேர்வு நடைபெறுகிறது .தேர்வு எழுதுபவர்கள் அரை மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு மையத்திற்கு வந்துவிடவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு அறைக்குள் ஹால் டிக்கெட் தவிர வேறு எதுவும்  கொண்டு செல்லக்கூடாது. 
  • கருப்பு & நீல நிற பால் பாயிண்ட் பென் மட்டுமே உபயோகிக்க வேண்டும் .
  • தேர்வு எழுதுபவர்கள் கேள்வித்தாளில் எதையும் எழுத கூடாது.
  • காப்பி அடித்து எழுதினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.