ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு  உள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.