திருவாரூர் இடைத்தேர்தலை இரத்து…தேர்தல் ஆணையம் தீடிர் முடிவு…!!

திருவாரூர் இடைத்தேர்தலை இரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இடைத்தேர்தல் அறிவிப்பு :

ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10ம் தேதி தொடங்கும்.அதேபோல் ஜனவரி 31-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இடைத்தேர்தலுக்கான மனுதாக்கல் ஜனவரி 3-ஆம் தேதியும், மனுதாக்கல் செய்ய இறுதி நாள் ஜனவரி 10-ஆம் தேதி என்றும், ஜனவரி 11-ஆம் தேதி முதல் வேட்பு மனுக்களை பெறலாம் என்றும், மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 14-ஆம் தேதி இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது.

தேர்தல் இரத்து : 

இந்நிலையில்  திருவாரூர் இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.இந்நிலையில் இன்று திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment