“எட்டுதிக்கும் அரோகார கோஷத்தில் “திருச்செந்தூர் ஆவணி தேரோட்ட திருவிழா வெகு விமர்சை

முருகனின் அறுபடை வீட்டிகளில்  ஒன்றாக விளங்கும் திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக நடைபெறும்.அதன்படி இந்தாண்டுக்கான ஆவணித் திருவிழா கடந்த 20ந்தேதி கொடியேற்றப்பட்டு அரோகரா கோஷத்துடன் தொடங்கியது.

இதனை தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளியும் வீதிவுலா வந்தும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான  தேரோட்டம் இன்று காலை  காலை 6 மணியளவில்  தொடங்கியது. இந்த தேரோட்டத்தில் பலாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் அரோகரா கோஷத்திலும் பக்தர்களின் வெள்ளத்தில் தேர் மிதந்து வந்தது.

author avatar
kavitha