என்ன வேலைய சொன்னா என்ன வேலைய செய்ற சஸ்பேண்ட் ஆன ஊழியர்கள்!!

தெலுங்கானாவில் வேலை நேரத்தில் வேலையே பார்க்காமல், டிக்டாக் செய்த மாநகராட்சி ஊழியர்களை கம்மம் மாவட்ட மாநகராட்சி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.

தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் இவர்கள் 9 பேர் வேலை பார்த்து வந்தனர். வேலை பார்க்கும் நேரத்தில் டிக்டாக்கில் நடித்து விடீயோக்களை பதிவு செய்து வந்தனர். கம்மம் மாநகர மக்கள் அதனை பார்த்து அலுவலக நேரத்தில் வேலை பார்க்காமல் டிக்டாக்கிள் விடீயோக்களை பதிவேற்றுவதாக கண்டனங்கள் தெரிவித்தனர். இந்த வீடியோ மாநிலம் முழுவதும் பரவியது.

இந்நிலையில், வேலை நேரத்தில் டிக்டாக்கில் வீடியோ எடுத்ததால் அந்த 9 பேரையும் கம்மம் மாநகராட்சி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.