அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மைய பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது . சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன், கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

வேலூர், காஞ்சிபுரம். திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube