சென்னை வளசரவாக்கத்தில் ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

சென்னை வளசரவாக்கத்தில் கொரோனாவின் பாதிப்பு ஆயிரத்தை கடந்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதுவரை 68 லட்சத்துக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனை தொடர்ந்து தமிழ் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட இடமாக கருதப்படும் சென்னை தான்.

இந்த சென்னையில் உள்ள முக்கியமான இடம் ஆகிய வளசரவாக்கத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வளசரவாக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 975 பேருக்கு பாதிப்பு இருந்தது. தற்பொழுது ஆயிரத்தை நெருங்கி அங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ராயபுரம் கோடம்பாக்கம் ஆகிய மாநிலங்களிலும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

 

author avatar
Rebekal