இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவு செய்த மாணவிக்கு 4 லட்சம் அபராதம்..!

இங்கிலாந்தில் படித்து வந்த கேரிஸ் என்ற இளம்பெண் கடந்த அக்டோபர் 12 ம் தேதி குடும்பத்தை சந்திக்க மான்செஸ்டரிலிருந்து விமானம் மூலம் ஜெர்சிக்கு வந்துள்ளார். விமானத்தில் கேரிஸ் அருகில் அமர்ந்திருந்த ஒருவர் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

எனவே கேரிஸ் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கேரிஸ் வீட்டிற்கு  வந்த எட்டு நாட்களுக்குப் பிறகு மேலும், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அதிகாரிகள்  கூறினார். அவரது வீட்டு முகவரியில் அவரை தொடர்பு கொள்ள அதிகாரிகள் பல முறை முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஆனால், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை, கேரிஸ் ஜெர்சிக்கு வந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, சுயமாக தனிமைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும், அதற்கு பதிலாக உணவகங்களுக்கும், கடைகளுக்கும் சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து, ஒரு உணவகத்தில் இருந்து இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார், 14 நாள் சுய தனிமை மீறியதற்காக 6,600 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
murugan