ELECTION BREAKING: தூத்துக்குடியில் முதல் சுற்று முடிவுகள் விவரம் வெளியானது

மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக இந்திய அளவில் மாநிலம் முழுவதும் முன்னிலை பெற்று வருகிறது.

ஆனால் இதில் தமிழகத்தில் மற்றும் விதிவிலக்காக திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.அதன் படி தூத்துக்குடியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி  30,424  வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட  தமிழிசை சவுந்தரராஜன் 10,463 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அமமுக சார்பில் போட்டியிட்ட எம்.புவனேஷ்வரன் 4,538 வாக்குகள் பெற்று உள்ளார்.இந்நிலையில் க்றிஸ்டண்டைன் ராஜசேகர்  2,357 வாக்குகள் பெற்றுள்ளார்.  மநீம சார்பில் போட்டியிட்ட பொன் குமரன்  1,109 வாக்குகள் பெற்றுள்ளார்.

இதில் கனிமொழி 20000 வாக்கு வித்தியாசத்தில் தமிழிசையை விட முன்னிலையில் உள்ளார்.

author avatar
kavitha

Leave a Comment