தூத்துக்குடி:பிகில் திரைப்படத்திற்கு போலி டிக்கெட் விற்ற இருவர் கைது..!

தூத்துக்குடி:பிகில் திரைப்படத்திற்கு போலி டிக்கெட் விற்ற இருவர் கைது..!

நடிகர் விஜய் நடித்த “பிகில்”திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. “பிகில்” திரைப்படம் தமிழகத்தில் பல திரையங்குகளில் இன்று அதிகாலை சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டது.
தூத்துக்குடியில் உள்ள ஒரு திரையரங்கில் இன்று  சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. சிறப்பு காட்சிக்கு சிலர் போலி டிக்கெட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து திரையங்குக்கு விரைந்து வந்த போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தூத்துக்குடியை சேர்ந்த மோகன் பாபு (வயது 24), ஆனந்தராஜ் (35) ஆகிய இருவரும் போலி டிக்கெட் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மோகன்பாபு, ஆனந்தராஜ் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube