தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி வளாகத்திற்கு அருகே ஆசிரியர் வெட்டி கொலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் உள்ள புதூரில் வட்டார வளர்ச்சி மையத்தில் சிறப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தவர் வடிவேல் முருகன். இவர் இன்று பள்ளி வளாகத்திற்கு அருகே வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவதால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

இந்த கொலை குறித்து போலீசார் விசாரிக்கையில் குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பந்தமாக அவரது மைத்துனர் அற்புத செல்வன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.