நாளை மறுநாள் முதல் தூத்துக்குடி – பெங்களூர் விமான சேவைகள் துவக்கம்!

நாளை மறுநாள் முதல் தூத்துக்குடி – பெங்களூர் விமான சேவைகள் துவக்கம்!

தூத்துக்குடி முதல் பெங்களூரு இடையேயான விமான சேவை நாளை மறுநாள் முதல் மீண்டும் துவங்கப்படுகிறது.

கொரானா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதுமே உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. தன்னால் விமான சேவைகள், பேருந்துகள், பள்ளி கல்லூரிகள் அனைத்துமே செயல்படாமல் உள்ளது. தற்பொழுது தான் அரசு சில தளர்வுகளை கொடுத்து வருகிறது.

விமான சேவைகள் அருகில் உள்ள இடங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு கொண்டு இருந்தது நிலையில், கடந்த மார்ச் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட தூத்துக்குடி – பெங்களூர் இடையேயான விமான சேவை நாளை மறுநாள் முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது. விமான சேவை மீண்டும் நல்லபடியாக நாளை மறுநாள் துவங்குகிறது என்று தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் அவர்கள் அறிவித்துள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube