டி 20 போட்டியில் இந்த ரன் மிக எளிமையானது-கோலி ..!

இந்தியா ,தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே டி 20 போட்டி நடைபெற்றது.நேற்று நடந்த கடைசி டி 20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது.

இந்நிலையில் இப்போட்டி முடிந்த பிறகு பேசிய கோலி , உலகக்கோப்பை முன் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்யவேண்டும் என்ற முடிவை எடுத்தோம்.அதன் படி செயல்பட்டோம்.இது போன்ற முயற்சிகளில் எதிரான முடிவுகள் அமையும் போது அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியும் என கூறினார்.

இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்.முதல் இன்னிங்ஸில் பிட்ச் அவர்களுக்கு சாதகமாக அமைந்தது.டி 20 போட்டியில் இந்த ரன் மிக எளிமையானது.உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.இன்னும் சில போட்டிகளில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கூறினார்.

author avatar
murugan