இது ஆதாரமற்ற வதந்தி! தன்னை குறித்து பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்ரம்!

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், இன்று பல நடிகர் அடிமட்டத்திலிருந்து, புகழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளனர் என்று தான் கூற வேண்டும். அந்த வகையில், நடிகர் சீயான் விக்ரம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். 

இந்நிலையில், சீயான் விக்ரமின் மகன் துருவ்-ம் அவரது தந்தையை போல பிரபலமாகி வருகின்றார். இதனையடுத்து, தற்போது விக்ரம், இயக்குனர் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்திலும், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார். 

இதனையடுத்து, துருவ் சினிமாத்துறையில் தடம் பதித்து வருகிற நிலையில், நடிகர் விக்ரம், இந்த படங்களுக்கு பிறகு, படத்தில் நடிப்பதை விட்டுவிட்டு, தனது மகனின் வாழ்க்கையில் முழுநேர கவனம் செலுத்த போவதாக வதந்தியான செய்திகள் பரவி வந்தது. இதுகுறித்து விளக்கமளித்த நடிகர் விக்ரம், இது ஒரு ஆதாரமற்ற வதந்தி என்றும், அவர் தொடர்ந்து படத்தில் நடிக்கவுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.