நடிகை சாய்ப்பல்லவி விளம்பரங்களில் நடிக்க மறுப்பதற்கு காரணம் இது தான்!

நடிகை சாய்ப்பல்லவி விளம்பரங்களில் நடிக்க மறுப்பதற்கு காரணம்.

நடிகை சாய்பல்லவி  தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். இவர் மலையாள திரைப்படமான பிரேமம் என்ற திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். இவர் தமிழ் சினிமாவில் கஸ்தூரிமான் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்

அதனைத் தொடர்ந்து, இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ள நிலையில் இவர் தமிழ் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், விளம்பரங்களில் நடிக்காமல் போனது ஏன் என்று விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, அந்த விளம்பரத்தில் நடித்து இருந்தால் எனக்கு பெரிய அளவில் பணம் கிடைத்திருக்கும். அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன். வீட்டுக்கு சென்றால் மூன்று சப்பாத்தி அல்லது கொஞ்சம் சாதம் சாப்பிடுவேன். வேறு எந்த பெரிய தேவையும் எனக்கில்லை. என்னால் பிறர் சந்தோஷத்துக்கு உதவ முடியுமா? என்றுதான் பார்க்கிறேன் அவ்வளவுதான். என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.