மாற்றமில்லா விலையில் இன்றைய நிலவரம் இதோ

தமிழகத்தில், இன்று (செப்டெம்பர் ,23), பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய். 84.21 , டீசல் லிட்டருக்கு ரூபாய் 76.85 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொதுத் துறையை எண்ணெய்நிறுவனங்களான, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய  நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

இந்நிலையில்,சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.21 ரூபாய், டீசல் லிட்டர் 76.85 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha