சுஜித் மரணத்திற்கு இதுதான் காரணம் -அமைச்சர் கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில், இன்று சாமி தரிசனம் செய்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க தமிழக அரசு அணைத்து முயற்சிகளும் மேற்கொண்டது என்றும், குழந்தை சுஜித் விழுந்த இடம் பொது இடம் அல்ல. அவர்களது சொந்த இடம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், குழந்தையை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றாக தெரியும். இதை, மு.க.ஸ்டாலின் அரசியல் ஆக்க பார்க்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.