புத்துணர்ச்சியான முக அழகு பெற இதை செய்தால் போதும்!

புத்துணர்ச்சியான முக அழகு பெற இதை செய்தால் போதும்!

முகம் கருப்பாக இருக்கிறது என்று கவலைப்படுவதை விட வெள்ளையாக இருந்தும் டல்லாக புத்துணர்ச்சி இல்லாமல் இருக்கிறது என்று கவலைப்படுபவர்கள் அதிகம். பொது நிறமாகவோ, கருப்பாகவோ அல்லது வெள்ளையாகவோ எந்த நிறத்தில் இருந்தாலும் முகம் புத்துணர்ச்சியுடன் இருந்தாலே அழகாக இருக்கும். ஆனால், அதை எப்படி கொண்டுவருவது வாருங்கள் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • உலர்ந்த முந்திரி
  • காபி தூள் சிறிதளவு
  • நீர்

செய்முறை

முதலில் மிக்ஸி ஜார் எடுத்து அதில் உலர்ந்த முந்திரி பழத்தை போட்டு அத்துடன் சிறிது காபித் தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடத்திற்கு நன்றாக ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு சற்று வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவி துணியால் துடைத்து மாய்ஸ்சுரைசர் எதையாவது பயன்படுத்தினால் புத்துணர்ச்சியுடைய அழகிய முகம் கிடைத்துவிடும். இதை வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே போதும்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube