ஆந்திராவில் மதுக்கடைகள் திறப்பு ! அதற்கு காரணம் இதுவாம் வேற வழி இல்லையாம்

ஆந்திராவில் மதுக்கடைகள் இன்று முதல்  ( திங்கட்கிழமை )திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .ஆனால் மதுபானம் மீதான தடை வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

சிறப்பு தலைமைச் செயலாளர் ரஜத் பார்கவா நேற்று  ( ஞாயிற்றுக்கிழமை ) பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார் .அதில் அவர் கூறியதாவது மாநிலத்தின் வருவாய்யை அதிகரிக்க மதுபானக்கடைகளை திறக்க முடிவு செய்துள்ளோம் .நாளை முதல் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவித்தார்  .

ஆனால் அதே வேளையில் மதுபானம் குடிப்பதால் ஏற்படும் தீயவிளைவுகள் மிகுந்த வேதனை அளிக்கிறது .இதன் மீது முதலமைச்சர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் .எனவே அதற்கு தடை வரி விதிக்க முடிவு செய்துள்ளோம் அதற்கான தொகை பற்றிய அறியவிப்பு  விரைவில் வரும் என்றார் .

ஆந்திர அரசாங்கம் நீண்ட கால பூரண மது ஒழிப்பில் உறுதியாக உள்ளோம் என்றும்  இன்று முதல் ( திங்கட்கிழமை ) அனைத்து  கடைகளும் திறக்கப்படும். அதே வேளையில் ஊரடங்கில் தடை செய்யப்பட்டுள்ள  பகுதியில் செயல்படாது என்றும் மால்களில் உள்ள மதுபானக்கடைகள் செயல்படாது .மாநிலத்தில் சுமார் 3,500 கடைகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார் .

அதே வேளையில் மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்க  வேண்டும் .இதை மீறும் கடைகள் தற்காலிகமாக மூடப்படும் என்று தெரிவித்தார் .

 

 

author avatar
Castro Murugan