யாரும் மார்ச்-1 அன்று என்னை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்ல வேண்டாம் – திமுக தலைவர் வேண்டுகோள்

யாரும் மார்ச்-1 அன்று என்னை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்ல வேண்டாம் – திமுக தலைவர் வேண்டுகோள்

  • மார்ச்1-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மார்ச்1-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், திமுக கழக முன்னணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் என் மீது அன்பு கொண்ட யாரும் மார்ச் 1ம் தேதி அன்று தன்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தமிழர் நலனுக்காக தன்னை ஒப்படைத்துக் கொண்ட பேராசிரியர் பெருமகனார் நலம் பெற அனைவரும் தங்களது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி கொள்வோம் என குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube