திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ரூ.1.33 கோடி உண்டியல் காணிக்கை!

திருவண்ணாமலையில் கோயிலில் உண்டியல் ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் காணிக்கையை பொருத்து கிடைக்கும் .
அந்த வகையில்  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மார்கழி மாத உண்டியல் காணிக்கை ரூ.1.33 கோடி கிடைத்தது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் வந்து, இங்குள்ள உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை தரிசித்து விட்டு செல்கிறார்கள்.இதுதவிர ஒவ்வொரு பவுர்ணமியன்றும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். பவுர்ணமி முடிந்ததும் அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.
அதன்படி மார்கழி மாத பவுர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடந்தது. இப்பணியில் 150 பேர் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.33 கோடியும், தங்கம் 156 கிராமும், வெள்ளி 760 கிராமும் கிடைத்தது.
source: dinasuvadu.com

Leave a Comment