31-ம் தேதி வரை மூடப்படும் திருவண்ணாமலை உழவர் சந்தை!

31-ம் தேதி வரை மூடப்படும் திருவண்ணாமலை உழவர் சந்தை!

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது உலகின் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை அனைத்து சந்தைகள், மீன் கடைகள், ஆலயங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்துமே மூடப் பட்டு வருகின்றது.

இதனை தொடர்ந்து திருவண்ணாமலையிலும் இது குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற 31-ஆம் தேதி வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தையும் மூடப்படும் என அம்மாவட்ட  ஆட்சியர் அறிவித்துள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube